மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில்,ஆடிப்பெருக்கையொட்டி கோட்டை குளத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

திண்டுக்கல்லில், ஆடிப்பெருக்கையொட்டி கோட்டை குளத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல்:

ஆடிப்பெருக்கு நாளில் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் காவிரி தாயை நினைத்து பெண்கள் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் கோட்டை குளத்தில் நேற்று பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதையொட்டி நேற்று மாலையில் குடும்பத்துடன் ஏராளமான பெண்கள் அங்கு வந்தனர். அவ்வாறு வந்த அவர்கள், வாழை இலையில் தேங்காய், பழம், காப்பு அரிசி, மஞ்சள் கயிறு வைத்து எலுமிச்சைபழத்தில் விளக்கேற்றி காவிரித்தாயை வழிபட்டனர். அதன் பிறகு எலுமிச்சைபழ விளக்கை வாழை இலையில் வைத்து கோட்டை குளத்தில் மிதக்க விட்டனர். அதைத்தொடர்ந்து மஞ்சள் கயிறை கழுத்தில் அணிந்து கொண்டனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா