வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு மூலக்கழனி தங்கப்பா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). இவர் ரேஷன் கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வருவதற்காக ஆட்டோவில் இருந்து இறங்கி காயரம்பேடு கூட்ரோடு அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.