மாவட்ட செய்திகள்

மதுரவாயலில் திருட்டு-வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல், வானகரம், நூம்பல் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியும், மோட்டார் சைக்கிள்களில் தனியாக செல்பவர்களிடம் வழிப்பறியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து மதுரவாயல் உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் மதுரவாயல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், மதுரவாயலை சேர்ந்த அன்பழகன் (வயது 22), வேல்முருகன்(30) என்பதும், இருவரும் சேர்ந்து மதுரவாயல், வானகரம், நூம்பல் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியும், தனியாக நடந்து செல்பவர்களை வழிமறித்து செல்போன்கள் மற்றும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகள், 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்