மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் இனி ஊரடங்கு இருக்காது - மந்திரி ராஜேஷ் தோபே தகவல்

மராட்டியத்தில் இனி ஊரடங்கு இருக்காது என மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் மிஷன் பிகின் அகெய்ன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே இயல்பு நிலை தொடங்கிவிட்டது. இனி ஊரடங்கு இருக்காது. மாநிலத்தில் உள்ள உடற்பயிற்சி மையங்கள் மற்றும் வணிக வளாகங்களை மீண்டும் திறக்கலாமா? என்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

உடற்பயிற்சி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் உடற்பயிற்சி மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமாகும். எனவே உடற்பயிற்சி மையங்கள் விரைவில் திறக்கப்படும். இதுகுறித்த வழிமுறைகள் அரசால் உருவாக்கப்படும். இருப்பினும் இதுபற்றி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இறுதி முடிவு எடுப்பார்.

ஆயினும் உள்ளூர் ரெயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு