மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை நுழைவு வாயில் பகுதியில் நின்று பார்த்துவிட்டு சென்ற சுற்றுலா பயணிகள்

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

தினத்தந்தி

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில் பயணிகள் வர தொடங்கி உள்ளனர். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிக அளவு பயணிகள் மாமல்லபுரம் வந்திருந்தனர்.

அவர்கள் கட்டணமில்லாமல் கண்டுகளிக்க கூடிய அர்ச்சுனன் தபசு புராதன சின்னத்தை கண்டு களித்தனர்.

கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன சின்னங்கள் நேற்று திறக்கப்படாததால் நுழைவு வாயில் பகுதியிலேயே நின்று பலரும் பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு