மாவட்ட செய்திகள்

மாமல்லபுரம் அருகே விபத்துகளை தடுக்க தானியங்கி சிக்னல் போலீசார் நடவடிக்கை

விபத்துகளை குறைக்க தானியங்கி சிக்னல் அமைக்க மாமல்லபுரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பேரூர் கிழக்கு கடற்கரை சாலை திருப்போரூருக்கு செல்லும் வலதுபக்க சாலையில் வாகனங்கள் திரும்பும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகம் நடந்தன. இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில் இந்த பகுதியில் சாலையை கடக்கும் வாகனங்கள் நின்று செல்லவும், விபத்துகளை குறைக்கவும் தானியங்கி சிக்னல் அமைக்க மாமல்லபுரம் போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி கிழக்கு கடற்கரை சாலை பேரூர் பகுதியில் தானியங்கி சிக்னலை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் முன்னிலையில் மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்புராஜ் இதனை தொடங்கி வைத்தார். அந்த பகுதியில் கடக்கும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையில் வேக குறைப்பு தடுப்பு பலகைகளும் அமைக்கப்பட்டன.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்