மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை பகுதியில், சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது - மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

மயிலாடுதுறை பகுதியில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மதுகடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி, உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் தென்னலக்குடி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காரைக்கால் வரிச்சிக்குடி சோனியா காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார் (வயது 36) என்பதும், அவர் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்த 9 மதுபாட்டில் களையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் செம்பனார்கோவில் ஆக்கூர் முக்குட்டு அருகே மயிலாடுதுறை தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார்சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வடகரை மேலதெருவை சேர்ந்த அகோரம் மகன் சரவணன் (வயது 35), வரிச்சிக்குடியை சேர்ந்த ரகு ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து, அவரிடம் இருந்த 63 லிட்டர் சாராய பாக்கெட்டுகளையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ரகுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்