மாவட்ட செய்திகள்

பாகூரில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

பாகூர்,

பாகூர் தென் பெண்ணை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்தப்பட்டு வந்தது. அதனை தடுக்க வருவாய் துறையினரும் போலீசாரும் சோதனை சாவடிகள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சோரியாங்குப்பத்தில் தென் பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது சோரியாங்குப்பம் - குருவிநத்தம் வழியாக 3 பேர் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி சென்றதை கண்டறிந்தனர். போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றவர்கள் வண்டிகளில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்