மாவட்ட செய்திகள்

போளூரில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் திருடியவர் கைது - 8¼ பவுன் நகை பறிமுதல்

போளூரில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8¼ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

போளூர்,

போளூர் எஸ்.எம்.டி. நகரில் வசிப்பவர் முத்துக்குமார், எல்.ஐ.சி. முகவராக உள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 8 பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முத்துக்குமார் வீட்டில் திருடியது காஞ்சி கிராமத்தை சேர்ந்த சித்திக் என்ற ஷாஜகான் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் திருடி உள்ளது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து