மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் இணைய வழியில் வழங்கப்படும் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் இணைய வழியில் வழங்கப்படும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு சில்லரை விற்பனைக்கு ஏற்கனவே நிரந்தர உரிமம் பெற்று இருப்பவர்களை தவிர தற்காலிக உரிமம் பெற உள்ளவர்கள் இணைய வழியில் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிற 1-ந் தேதி முதல் தற்காலிக உரிமங்கள் இணைய வழியிலேயே வழங்கப்படும்.

மேற்கண்ட உரிமங்கள் கோவிட்-19 தொற்று காரணமாக இவ்வாண்டு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் ஏற்கனவே இருந்த பழைய தேதிகள் முறையே கடைபிடிக்கப்படும். இதற்காக ஆங்காங்கே இயங்கி வரும் அரசு இ-சேவை மையங்களில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், முகவரிக்கான ஏதாவது ஒரு சான்று ஆவணம், வியாபாரம் நடத்தும் கடைக்கான வரி ரசீது ஆகிய சான்று ஆவணங்களை கொண்டு சென்று அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து கொள்ளலாம். 23-ந் தேதிக்கு பின்னர் பட்டாசு சில்லரை விற்பனை காண தற்காலிக உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

மேற்கண்ட தகவலை கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்