மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 428 பேருக்கு தொற்று உறுதி கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் மேலும் 428 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

சேலம்:

சேலம் மாவட்டத்தில் மேலும் 428 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலியாகினர்.

கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் தினமும் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 511 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 428 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 229 பேர் அடங்குவர்.

ஓமலூரில் 35 பேர், ஆத்தூரில் 19 பேர், பனமரத்துப்பட்டியில் 16 பேர், சங்ககிரியில் 15 பேர், காடையாம்பட்டி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 11 பேர், எடப்பாடி, சேலம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், நங்கவள்ளி, தாரமங்கலம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 9 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 8 பேர், அயோத்தியாப்பட்டணம், மேட்டூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், கெங்கவல்லி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், மேச்சேரியில் 4 பேர், மகுடஞ்சாவடியில் 3 பேர், கொளத்தூர், கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.

39 ஆயிரத்தை தாண்டியது

இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 381 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 ஆயிரத்து 444 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

5 பேர் பலி

சேலத்தில் 62, 70, 71 ஆகிய வயதுடைய 3 முதியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தனர். இதேபோல் சேலத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் மற்றும் 54 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரிகளில் இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 495 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு