சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 603 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 822 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 603 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்ககிரி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் தலா 32 பேர், ஆத்தூரில் 31 பேர், சேலம் ஒன்றியத்தில் 30, வீரபாண்டியில் 23 பேர், தலைவாசலில் 17 பேர், மகுடஞ்சாவடியில் 14 பேர், கொங்கணாபுரம், அயோத்தியாப்ட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், நங்கவள்ளி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 12 பேர், கெங்கவல்லியில் 11 பேர், எடப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், மேச்சேரி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், காடையாம்பட்டியில் 5 பேர், பனமரத்துப்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், நரசிங்கபுரத்தில் 3 பேர், ஏற்காட்டில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
52 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 650 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 4,923 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
9 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 63, 64, 66, 75, 76 ஆகிய வயதுடைய ஆண்களும், 48, 67, 57, 70 ஆகிய வயதுடைய பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 685 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.