மாவட்ட செய்திகள்

சோழிங்கநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சோழிங்கநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினத்தந்தி

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையை ஒட்டிய பழைய வண்டிசாலையில் உள்ள சுமார் 10 அடி அகல ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்துறை சார்பில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

மழைகாலங்களில் சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதாலும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், சாலைவிரிவாக்கம் வேண்டியும் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக கூறப்படுகிறது.

புறம்போக்கு நிலத்தில் உள்ள கட்டிடங்கள் முதற்கட்டமாக இடிக்கப்பட்டன. நேற்று மீண்டும் இடிக்கும் பணி தொடங்கியபோது அந்த பகுதியில் உள்ள சிலர் இது பட்டாநிலம் என்று கூறியதையடுத்து நேற்று இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு