மாவட்ட செய்திகள்

சோழிங்கநல்லூரில் தொழிலாளி குத்திக்கொலை

சோழிங்கநல்லூரில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கணேசன் (வயது 43). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். நேற்று மாலை பொன்னியம்மன் கோவில் அருகே மது போதையில் இருந்த கணேசனுக்கும் அங்கு வந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேசனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கணேசன் இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கணேசனின் உடலை செம்மஞ்சேரி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளியை குத்திக்கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு