மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி 6 பேர் சாவு தந்தை-மகன்கள் பலியான பரிதாபம்

ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விநாயகா நகர் நெமிலி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). இவருக்கு லதா என்ற மனைவியும், கண்ணன் (27), கார்த்தி (26) என 2 மகன்களும் இருந்தனர். இவர் தனது வீட்டின் மாடியில் 10 அறைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

மேலும் வீட்டின் முன் பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். வீட்டின் தரைத்தளத்தின் முன்பகுதியில் கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்த கழிவுநீரை அகற்ற கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்தார். இதனையடுத்து நேற்று மதியம் கழிவுநீரை அகற்றுவதற்காக தனியார் வாகனம் வரவழைக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்