மாவட்ட செய்திகள்

தென்காசியில் 50 சதவீத அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் கிடைக்கவில்லை - கலெக்டரிடம் தி.மு.க. புகார்

தென்காசியில் 50 சதவீத அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் கிடைக்கவில்லை என்று கலெக்டரிடம் தி.மு.க. புகார் மனு கொடுத்தது.

தினத்தந்தி

தென்காசி:

தென்காசி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர். அதில் கூறி இருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தபால் வாக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை 50 சதவீத வாக்குகள்தான் அனுப்பப்பட்டுள்ளது என்றும், பல அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வரவில்லை என்றும் புகார் கூறுகிறார்கள். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டால் உரிய பதில் கிடைக்கவில்லை. உதாரணமாக சங்கரன்கோவில் தொகுதியில் மொத்த தபால் வாக்குகள் 3,927 ஆகும். கடந்த 20-ந் தேதி வரை பெறப்பட்ட தபால் வாக்குகள் 1,921 ஆகும். சில அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் கிடைக்கவில்லை என்ற புகார் வருகிறது. அந்த அடிப்படையில் அதிகாரிகளை கேட்கும்போது முகவரி சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அஞ்சலக ஊழியர்கள் அதனை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் என்று கூறினார்கள். எனவே தபால் வாக்குகள் அனுப்பப்படாமல் இருந்தால் உடனடியாக அனுப்ப அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறும், முறையான முகவரிக்கு தபால் வாக்குகள் கிடைக்க சம்பந்தப்பட்ட தபால் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது தி.மு.க. நகர செயலாளர் சாதிர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு