மாவட்ட செய்திகள்

வெடிமருந்து தொழிற்சாலையில், தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை உள்பட நாடு முழுவதும் உள்ள 41 ராணுவ தளவாட தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் 4-வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதற்கு சி.எப்.எல்.யு. தொழிற்சங்க தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலிப்குமார், டி.எல்.எப்.யு. தொழிற்சங்க நிர்வாகி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பத்ரி தொடங்கி வைத்தார். போராட்டம் குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்த எச்.பி.எப். போட்டோ பிலிம் தொழிற்சாலை, எச்.எம்.டி. தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. எனவே தற்போது அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையும் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டால், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஆரம்பத்தில் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டு, அதன்பிறகு தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள 41 தொழிற்சாலைகளிலும் போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அதில் 100 சதவீத தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். வருகிற 27-ந் தேதி நீலகிரி மாவட்ட விவசாய சங்கம் சார்பில் தொழிற்சாலையை பாதுகாக்க போராட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்