மாவட்ட செய்திகள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மறுதேர்வை 23 பேர் எழுதினர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 17,405 மாணவர்கள், 21,052 மாணவிகள் என மொத்தம் 38,457 பேர் தேர்வு எழுதினர்.

தினத்தந்தி

வேலூர்,

தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 17,405 மாணவர்கள், 21,052 மாணவிகள் என மொத்தம் 38,457 பேர் தேர்வு எழுதினர். கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் 24-ந் தேதியன்று நடந்த வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய தேர்வுகளை சில மாணவர்கள், தனித்தேர்வர்கள் எழுத முடியாமல் போனது.

அவர்களுக்காக மறுதேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தேர்வை எழுத ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 5 மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் 43 பேர் என மொத்தம் 48 பேர் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தனர்.

இந்தநிலையில் பிளஸ்-2 மறுதேர்வு நேற்று நடைபெற்றது. வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மாதிரிப்பள்ளி, கொணவட்டம் அரசுப்பள்ளி உள்பட 13 மையங்களில் மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

5 மாணவ-மாணவிகளில் 2 பேரும், 43 தனித்தேர்வர்களில் 21 தனித்தேர்வர்கள் என மொத்தம் 23 பேர் தேர்வு எழுதினர். 25 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களை கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்