மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வை 7 ஆயிரத்து 145 பேர் எழுதுகின்றனர் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வை 7 ஆயிரத்து 145 பேர் எழுதுகின்றனர் என்று போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வுக்குழுமம் மூலம் 2019-ம் ஆண்டுக்கான 2-ம் நிலைக்காவலர்கள், 2-ம் நிலை சிறைக்காவலர்கள்(ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொது எழுத்துத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த தேர்வானது திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இதில் ஆண்கள் 6 ஆயிரத்து 283 பேர், பெண்கள் 862 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 145 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு வர வேண்டும்.

விண்ணப்பதாரர் தேர்வுக்கூட நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தை மாற்றம் செய்ய இயலாது. நுழைவு சீட்டு கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்