திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வுக்குழுமம் மூலம் 2019-ம் ஆண்டுக்கான 2-ம் நிலைக்காவலர்கள், 2-ம் நிலை சிறைக்காவலர்கள்(ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொது எழுத்துத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த தேர்வானது திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இதில் ஆண்கள் 6 ஆயிரத்து 283 பேர், பெண்கள் 862 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 145 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு வர வேண்டும்.
விண்ணப்பதாரர் தேர்வுக்கூட நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தை மாற்றம் செய்ய இயலாது. நுழைவு சீட்டு கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.