மாவட்ட செய்திகள்

வேளச்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பன்றி காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பில் பன்றி காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பன்றி காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது. கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் பன்றி காய்ச்சல் மற்றும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும். இதனால் கைகளை தொடர்ந்து கழுவுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. இதைப்போல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வணிக வளாகத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் துணிப்பைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் குணசீலன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்