மாவட்ட செய்திகள்

இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை கூட்டம்

அரக்கோணம் கோட்ட போலீஸ் இன்ஸ்பொக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்.

தினத்தந்தி

அரக்கோணம்

அரக்கோணம் கோட்ட போலீஸ் இன்ஸ்பொக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்.

அரக்கோணம் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கலந்து கொண்டு பொது மக்களிடம் புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், போலீஸ் நிலையத்தில் ஆவணங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் விளக்கியதோடு குற்றவாளிகளை கைது செய்யும்போது நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும்.

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதற்கு ஏற்ப செல்பட வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் அரக்கோணம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்