மாவட்ட செய்திகள்

ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்: ரெயின்போ நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து

ரெயின்போ நகர் பகுதியில் போலீசார் இரவு ரோந்து சென்று ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்கள்.

தினத்தந்தி

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவையிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் புதுவையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பால் பூத்துகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் திறந்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என புதுவை அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகிறார்கள். அதன்படி புதுவை கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் தாசில்தார் ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமையில் ரெயின்போ நகர் பகுதியில் இரவு ரோந்து சென்றனர். அப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு