மாவட்ட செய்திகள்

சுகாதார பணிகள் தீவிரம்

சுகாதார பணிகள் தீவிரம்.

கோத்தகிரி,

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கேர்பன், கன்னிகா தேவி காலனி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் முழு சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட கேர்பன், கன்னிகா தேவி காலனி ஆகிய கிராம பகுதிகளில் உள்ள சாலைகளில் தடுப்புகளை அமைத்தனர்.

மேலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதனை பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் ஆய்வு செய்ததுடன், அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊழியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு