மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 50 பேர் மீது வழக்கு

திருவள்ளூரை அடுத்த பூண்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கொரோனா தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்காமல் கொரோனா தொற்று பரவும் விதமாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மணிமேகலை, மாவட்ட துணைத்தலைவர் பிரவீனா, மாநில பொதுச்செயலாளர் டெய்சி உள்பட 50 பேர் மீது புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்