மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 14 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் போலீஸ் டி.ஐ.ஜி. உத்தரவு

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 14 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் போலீஸ் டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வெற்றிச்செல்வன் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கும், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கும், தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தாழம்பூர் போலீஸ் நிலையத்திற்கும், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் திருத்தணி போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்களான மகேஸ்வரி திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், சேதுபதி திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், சிவக்குமார் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கும், இளவரசன், காஞ்சீபுரம் மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கும், கோமதி கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், பரிபூரணம் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், சத்தியவாணி காஞ்சீபுரம் மாவட்ட சீனியர் கிரைம் ஸ்குவாட் பிரிவுக்கும், ஜெயந்தி ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு