மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வம் வாக்கு சேகரித்தார்.

தினத்தந்தி

வண்டலூர்,

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வம், செங்கல்பட்டு தொகுதிக்கு உள்பட்ட வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், நெடுங்குன்றம், ஊனைமாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரித்தார். அப்போது எம்.எல்.ஏ. மற்றும் வேட்பாளருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பூக்களை தூவி, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.கே. தண்டபாணி, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி பொறுப்பாளர் ஜி.கே.லோகநாதன், மறைமலைநகர் நகர செயலாளர் சண்முகம், ஆப்பூர் சந்தானம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது