மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போலீசார் விசாரணை

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி ரெயில் நிலையம் சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு 5 அடி உயரத்தில் சிவலிங்கம் உள்ளது. தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் பூசாரி கோவிலை திறக்க சென்ற போது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.

இரவில் மர்ம நபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை