மாவட்ட செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா: நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை சூடுபிடித்தது

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை சூடுபிடித்தது. இதை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

தினத்தந்தி

நாமக்கல்,

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவார்கள். மேலும் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

எனவே நாமக்கல் நகரில் நேற்று கடைவீதி, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் அகல் விளக்குகளை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்து இருந்தனர்.

அகல் விளக்கு விற்பனை சூடுபிடித்தது

தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட இந்த விளக்குகள் தாமரை பூ, குத்துவிளக்கு, விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டு இருந்தன. இவை அவற்றின் தரத்தை பொறுத்து ரூ.2, ரூ.5, ரூ.10 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டன. இதை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் அகல் விளக்குகள் விற்பனை சூடுபிடித்தது.

இதற்கிடையே வழக்கம்போல் இந்த ஆண்டும் நாமக்கல் காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு 7 மணி அளவில் 1,008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து