மாவட்ட செய்திகள்

கருணாநிதி சமாதியில் ரூ.4 லட்சத்தில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் நிழற்குடை

கருணாநிதி சமாதியில் ரூ.4 லட்சத்தில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் நிழற்குடை அமைக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் சென்னை மெரினா கடற்கரையோரம் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக அங்கு 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் சமாதி மட்டும் 680 சதுர அடியில் உள்ளது.

ஒரு அடி உயரத்தில் சமாதி தற்போது கட்டப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து கருணாநிதி சமாதியை சுற்றி துருப்பிடிக்காத இரும்பினால் வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், சமாதியை சுற்றிலும் சிமெண்டு கற்களும் பதிக்கப்பட்டு வருகின்றன.

நிழற்குடை

இந்நிலையில் கருணாநிதி சமாதியில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் ரூ.4 லட்சம் செலவில் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதற்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு அதில் இந்த நிழற்குடை அமைகிறது. புதுச்சேரியில் நிழற்குடை தயாரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

38 அடி உயரம், 33 அடி அகலத்தில் இந்த நிழற்குடை கருணாநிதி சமாதியில் தற்காலிகமாக நிறுவப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று இரவு முதல் நடைபெற்று வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதிக்கும் இதுபோல் தான் நிழற்குடை தற்காலிகமாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடைபாதை

மேலும், கருணாநிதி சமாதிக்கு பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக தனித்தனி நடைபாதை தலா 5 அடி அகலத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நடைபாதையில் சிமெண்டு கற்கள் பதிக்கப்பட உள்ளன. இதற்கான செலவுகளை தி.மு.க. தரப்பினர் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு