மாவட்ட செய்திகள்

சொத்துத்தகராறில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை; அண்ணனுக்கு வலைவீச்சு

நஞ்சன்கூடு அருகே சொத்துத்தகராறில் கத்தியால் குத்தி வாலிபரை கொன்ற அண்ணனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்

தினத்தந்தி

மைசூரு: நஞ்சன்கூடு அருகே சொத்துத்தகராறில் கத்தியால் குத்தி வாலிபரை கொன்ற அண்ணனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சொத்துத்தகராறு

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா மெல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் நாயக்(வயது 35). இவரது அண்ணன் ரங்கசாமி. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே சொத்துத்தகராறு இருந்து வந்தது. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

சகோதரர்கள் 2 பேரையும் ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து நடத்தி சமாதானமாக போகும்படி தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிந்த் நாயக், அண்ணன் ரங்கசாமியின் வீட்டின் கழிவறை கதவை உடைத்தார்.

குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிந்தநாயக் வீட்டிற்கு ரங்கசாமி சென்றார். பின்னர் அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோவிந்த் நாயக்கின் முதுகு பகுதியில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கோவிந்த் நாயக் நில குலந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அவரை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கோவிந்த் நாயக் பரிதாபமாக இறந்துவிட்டார்.

அண்ணன் கைது

இதுபற்றி தகவல் அறிந்த கவலந்தே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், சொத்துத்தகராறில் கோவிந்த் நாயக்கை, அவரது அண்ணனான ரங்கசாமி கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து ரங்கசாமியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கவலந்தே போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்