கோவில்பட்டி,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழு வதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பால், மருந்துகள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடை களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட் டன.
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 200-க்கு மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதனால் அங்கு பணியாற்றிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சுமார் ஒரு மாத காலமாக வேலைவாய்ப்பு இழந்து தவித்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவாத இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை இயக்குவதற்கு அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுத்து கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்தது.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் மீண்டும் திறப்பு
இந்த நிலையில் கோவில்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுழற்சி முறையில் பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்படி கோவில் பட்டி பகுதியில் உள்ள 50-க்கு மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், தீக்குச்சி தொழிற்சாலைகள், மருந்து முக்கிய குச்சிகளை பெட்டிக்குள் அடைக் கும் நிறுவனங்கள் போன்றவை நேற்று செயல்பட்டன.
அங்கு தொழிலாளர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வேலை செய்தனர். இதனை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
சமூக இடைவெளியை கடைபிடித்தனர்
முதல் கட்டமாக பகலில் மட்டுமே தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களை அவர்களது வீடுகளில் இருந்து தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு அழைத்து வரவும், வேலை முடிந்த பின்னர் அவர்களை வீடுகளுக்கு அழைத்து செல்லவும் வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் கோவில்பட்டி பகுதியில் உள்ள அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் வழக்கம்போல் செயல்படும். அங்கு தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து சுகாதாரமான முறையில் பணியாற்றுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.