மாவட்ட செய்திகள்

தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 27-ந் தேதி கடைசிநாள்

வாணியம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 27-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

தினத்தந்தி

வேலூர்,

வாணியம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்தாண்டிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இச்சேர்க்கையில் கலந்து கொள்ள www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது அருகே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சான்றிதழ்களுடன் சென்று இலவசமாக விண்ணப்பிக்கலாம். 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

இங்கு லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மெக்கானிக், பேஷன் டிசைன் மற்றும் டெக்னாலஜி, கம்மியர் மோட்டார் சைக்கிள், கம்மியர் குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்துதல், தோல்பொருள் உற்பத்தியாளர் ஆகிய பயிற்சிகள் கட்டணம் இன்றி அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதி கடைசி நாளாகும்.

இத்தகவலை வாணியம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து