மாவட்ட செய்திகள்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த சிறுத்தையின் பற்கள் - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த சிறுத்தையின் பற்கள் மற்றும் நகம், எலும்பு தூள்களை வனத்துறையினரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு அந்த விமானம் மீண்டும் துபாய் புறப்பட தயாரானது. முன்னதாக விமான நிலைய ஊழியாகள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா.

அப்போது விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு சிறிய பாசல் கேட்பாரற்று கிடப்பதை கண்டுபிடித்தனா. இதுபற்றி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பாசலை பரிசோதித்தனா.

அந்த பார்சலை பிரித்து பாத்தபோது, அதில் 3 பற்கள் இருந்தன. இது பற்றி வனத்துறைக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவற்றை ஆய்வு செய்தனர். அதில் அவை, பெரிய பூனை வகையின் பற்கள் போல் உள்ளது என்றனர். மேலும் அவை சிறுத்தை, புலி போன்றவற்றின் பற்களாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் அவற்றின் நகங்கள், எலும்பு துண்டுகள் அடங்கிய தூள்களும் இருந்தன.

பற்கள் மற்றும் நகம், எலும்பு தூள்களை பறிமுதல் செய்து வனவிலங்குகள் ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிறுத்தை, புலியின் நகம், பல் போன்றவைகளை சங்கிலியில் டாலர்போல் சேர்த்து அணிந்து கொண்டால் அதிஷ்டம் உண்டாகும் என்ற நம்பிக்கை ஒரு சிலரிடம் உள்ளது. அப்படிபட்டவாகள் பல லட்சம் ரூபாய் கொடுத்து இவைகளை வாங்குவாகள்.

அவர்களுக்காக இவை விமானத்தில் கடத்தி வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு