மாவட்ட செய்திகள்

எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

மத்திய அரசு எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து திருப்பத்தூர் எல்.ஐ.சி. கிளை சார்பில் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் என்.பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.ஞானமணி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தை கிளை மேலாளர் டி.விஜயேந்திரன் தொடங்கி வைத்தார். வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சி.செல்வம், நகர தொழிற்சங்க கூட்டமைப்பு ஜோதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். இதில் முகவர் சங்கம் அட்சயா முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.மூர்த்தி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி ஒரு மணி நேரம் எல்.ஐ.சி. அலுவலக கதவுகள் மூடப்பட்டது. இதனால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் வெளியே காத்திருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்