மாவட்ட செய்திகள்

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் திரவம், கலெக்டர் நடராஜன் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் திரவம் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்- ஏ திரவம் வழங்குவது தொடர்பான கூட்டம் மற்றும் தேசிய குடல்புழு நாள் பற்றிய கண்காணிப்புக்குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

இந்த வைட்டமின்-ஏ சத்து குறைபாட்டினால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், தோல் நோய் மற்றும் வயிற்றுப்புண் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க வைட்டமின் திரவம் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 417 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த பணி நாளை முதல் அனைத்து துணை சுகாதார மையத்திலும், அதனை தொடர்ந்து நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந்தேதி வரை அங்கன்வாடி மையங்களிலும் கொடுக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமில் தங்களது குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முல்லைக்கொடி, துணை இயக்குனர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்