மாவட்ட செய்திகள்

திருப்பூரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் கைது

திருப்பூரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

வீரபாண்டி,

திருப்பூர் காங்கேயம் ரோடு முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்த 33 வயது உடைய ஒருவர் லாரி டிரைவராக இருந்து வருகிறார். இவருடைய வீட்டில் இவருடைய உறவினரான பெண் ஒருவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட தனது மகளான 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை கொண்டு வந்து விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் வேலை முடிந்ததும் அந்த பெண் தனது மகளை அழைத்து செல்ல சென்றுள்ளார். அப்போது அந்த மாணவி அங்கு அழுது கொண்டிருந்தாள். இது குறித்து மாணவியிடம் அந்த பெண் விசாரித்தபோது, லாரி டிரைவர், தன்னிடம் பாலியல் ரீதியாக உணர்வுகளை தூண்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளாள். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், திருப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த மாணவியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லாரி டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி, டிரைவர் திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் நிற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று லாரி டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை