மாவட்ட செய்திகள்

மனஉளைச்சலுக்கு மருந்தாகும் ‘மேஜிக் காளான்’

சிகிச்சையளிக்க முடியாத மன உளைச்சலால் அவதிப்படும் மக்களின் மூளையை மீட்டமைக்க ‘மேஜிக் காளான்’ எனப்படும் ஒருவித காளான் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தினத்தந்தி

சிகிச்சையளிக்க முடியாத மன உளைச்சலால் அவதிப்படும் மக்களின் மூளையை மீட்டமைக்க மேஜிக் காளான் எனப்படும் ஒருவித காளான் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தக் காளான்களில் காணப்படும் ஒருவித மயக்கத்தைத் தரக்கூடிய வேதிப்பொருள், மேற்படி பணியைச் செய்யும் என்று அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறிய அளவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 19 நோயாளிகளுக்கு சைகடெலிக் மூலக்கூறு அடங்கிய சைலோசிபின் என்ற மருந்தின் ஒரு டோஸ் கொடுக்கப்பட்டது.

அப்போது நோயாளிகளில் பாதிப் பேருக்கு மன உளைச்சல் ஏற்படுவது நின்று, மூளைச் செயல்பாட்டில் அனுபவப்பூர்வமான மாற்றங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். இந்நிலை கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கு நீடித்துள்ளது.

எனினும், லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த குழு, மருத்துவரின் ஒப்புதலின்றி நோயாளிகள் சுயமாக இந்த மருந்தை கட்டாயம் எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறியுள்ளது.

மன உளைச்சலின்போது, சைலோசிபின் வேதிப்பொருள், மூளைக்கு மசகுப் பொருள் போல செயல்படலாம் என்று பல தொடர் சிறிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

சைலோசிபின் அவ்வாறு செயல்படும்போது, மன உளைச்சல் அறிகுறிகளிலிருந்து நோயாளிகள் தப்பிக்க அனுமதிக்கிறது.

ஆனால், மூளைச் செயல்பாட்டின் மீது அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நோயாளிகளுக்கு சைலோசிபின் வழங்கப்படுவதற்கு முன்னரும், நோயாளிகள் நிதான நிலைக்கு வந்த பின்னரும் இம்பீரியல் குழுவினர் எம்.ஆர்.ஐ. ஸ்கேனை எடுத்துள்ளனர்.

அதில், மூளையின் இரு முக்கிய பகுதிகளை சைலோசிபின் பாதிக் கிறது என்பது தெரியவந்திருக்கிறது.

ஒன்று அமிக்டலா பகுதி, மற்றொன்று நரம்புகளின் பிணையப்பகுதி.

பயம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அமிக்டலா பெரும் பங்காற்றுகிறது. சைலோசிபின் உள்ளே சென்றவுடன் இந்தப் பகுதியின் செயல்திறன் குறைகிறது. அதேசமயம், சைலோசிபின் எடுத்துக் கொண்டபின் நரம்பு களின் பிணையப்பகுதி மிகவும் நிதானமாக செயல்படத் தொடங்குகிறது.

இப்போதைக்கு இந்தப் பரிசோதனைகள் சிறிய அளவிலேயே இருக்கின்றன. மன உளைச்சலுக்கு சைலோசிபினை மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்று ஏற்றுகொள்வதற்குமுன் பெரிய அளவிலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

ஆனால், மனஉளைச்சலுக்கான சிகிச்சையில் புதிய சிகிச்சை அணுகு முறைகள் தேவை, அவற்றில் ஒன்றாக சைலோசிபின் இருக்கக்கூடும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்