மாவட்ட செய்திகள்

ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்

வடமதுரை அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

தினத்தந்தி

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி அருகே தண்டவாளத்தின் ஓரம் 45 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இறந்தவர் ஊதா நிற கட்டம் போட்ட சட்டையும், கருப்பு நிற கால்சட்டையும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு