மாவட்ட செய்திகள்

4 மாதங்களாக 55 அடியாக நீடிக்கும் மஞ்சளாறு அணை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 4 மாதங்களாக மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியாக நீடித்து வருகிறது.

தினத்தந்தி

தேனி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 57 அடி. அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரத்து 230 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு, கடந்த ஜூன்4-ந்தேதி நீர்மட்டம் 55 அடியை எட்டியது. அதன் பின்பு வினாடிக்கு 20 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து அவ்வப்போது வினாடிக்கு 20 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில் 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து வினாடிக்கு 90 கனஅடியாக உயர்ந்தது. இதையடுத்து வினாடிக்கு 90 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 55 அடியாக நீடித்து வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வருகிற 15-ந்தேதி திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்