மாவட்ட செய்திகள்

மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்2

மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்.

தினத்தந்தி

மானூர்,

கேரள மாநிலம் மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில், அங்கு தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 55-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்தனர். இந்த நிலச்சரிவில் சிக்கி, நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நடுப்பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆகியோர் நடுப்பிள்ளையார்குளத்துக்கு சென்று, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட 4 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மானூர் முன்னாள் சேர்மன் கல்லூர் வேலாயுதம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்