மாவட்ட செய்திகள்

தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

வேப்பூர் அருகே தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

வேப்பூர்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்தவர் தவசி மகன் வேல்முருகன் (வயது 35), இவரும் அதே பகுதியை சேர்ந்த பொன்னன் மகன் மணி(30) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேல்முருகனும், மணியும் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே என்.நாரையூரில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக வேல்முருகன் நேற்று காலை மணியை அழைத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

வேப்பூர் கூட்டுரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்