மாவட்ட செய்திகள்

செங்குன்றம் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; அண்ணன்-தம்பி சாவு

சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

அண்ணன்-தம்பி

செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவருடைய மகன்கள் உதய்(வயது 13), சரண்(11).

இவர்களில் உதய், எடப்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பும், அதே பள்ளியில் சரண், 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். அண்ணன்-தம்பி இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து எடப்பாளையம் பஜாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை உதய் ஓட்டினான். அவருக்கு பின்னால் சரண் அமர்ந்து இருந்தான்.

லாரி மீது மோதி பலி

எடப்பாளையம் பகுதியில் திருவள்ளூர் நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இவர்களது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த உதய் மற்றும் சரண் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்து குறித்து சோழவரம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து பலியான அண்ணன்-தம்பி இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள், லாரி மீது மோதியதில் அண்ணன்-தம்பி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்