மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல், உப்பு உற்பத்தி நிறுவன ஊழியர் சாவு

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் உப்பு உற்பத்தி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் குமார் (வயது39). இவர் வேதாரண்யத்தில் உள்ள உப்பு உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு மேட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரியாப்பட்டினம் சாலையில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் படுகாயமடைந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்