மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள்கள்- மாட்டு வண்டி பறிமுதல் 3 பேருக்கு வலைவீச்சு

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

கபிஸ்தலம்,

சுவாமிமலை கிராம நிர்வாக அலுவலர் திவ்யபிரியா, பாபுராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், ஆகியோர் சுவாமிமலை மற்றும் பாபுராஜபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சுவாமிமலையில் காவிரி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் அதே பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் மதிவாணன் ஆகிய இருவரும் மணல் மூட்டைகளை ஏற்றி வந்தனர். அவர்களை வழிமறித்த போது அவர்கள் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதைப்போல பாபுராஜபுரம் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த மணி என்பவரை வழிமறித்த போது அவர் மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

பறிமுதல்

2 மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்