மாவட்ட செய்திகள்

சிமெண்டு குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி அமுதா நகர் 3-வது தெருவில் சாலையின் குறுக்கே செல்லும் சிமெண்டு குழாய் உடைந்து காணப்படுகிறது.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி அமுதா நகர் 3-வது தெருவில் சாலையின் குறுக்கே செல்லும் சிமெண்டு குழாய் உடைந்து காணப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும கழிவுநீர் சாலையின் இருபுறங்களிலும் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் குழாய் உடைந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிமெண்டு குழாயை சரி செயய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்