மாவட்ட செய்திகள்

மகள் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

மகள் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மனைவி ஜெயந்தி(வயது 45), மகள் சக்தி ரூபா. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மகள் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் ஜெயந்தி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகள் தீ வைத்து கொண்ட அதே இடத்தில், ஜெயந்தியும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார், ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு