மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் நடந்த வன்முறையின் போது ஆஞ்சநேயர் கோவிலை மனித சங்கிலி அமைத்து பாதுகாத்த முஸ்லிம்கள்

பெங்களூருவில் நடந்த வன்முறையின் போது ஆஞ்சநேயர் கோவிலை, முஸ்லிம் வாலிபர்கள் மனித சங்கிலி அமைத்து பாதுகாத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

சிறுபான்மை சமுதாயம் குறித்து அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன் என்பவர் முகநூலில் அவதூறான கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுபான்மை சமுதாயத்தினர் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு உள்பட 3 பேரின் வீடுகளுக்கு தீ வைத்தனர். மேலும் நவீனை கைது செய்யகோரி டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் முன்பு சிறுபான்மை சமுதாயத்தினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்கப்பட்டது. மேலும் போலீஸ் நிலையமும் சூறையாடப்பட்டது. இதன்பின்னர் டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்தது. வன்முறைக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து கொழுத்தினார்கள். கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்.

மனித சங்கிலி

இதற்கிடையே டி.ஜே.ஹள்ளி அருகே சாம்புரா மெயின் ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குள் புகுந்தும், வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இதுபற்றி சாம்புரா பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் வாலிபர்களுக்கு தெரியவந்தது. இதனால் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாலிபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர். மேலும் வன்முறையாளர்கள் கோவிலுக்குள் புகுந்து விடாத வகையில் முஸ்லிம் வாலிபர்கள் கோவிலின் முன்பு மனித சங்கிலி அமைத்து கோவிலை பாதுகாத்து நின்றனர்.

ஒருபுறம் சிறுபான்மை சமுதாயத்தினர் வன்முறையில் ஈடுபட்ட நேரத்தில், இன்னொருபுறம் முஸ்லிம் வாலிபர்கள் கோவிலை பாதுகாக்க மனித சங்கலி அமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோக்களை கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் முஸ்லிம் வாலிபர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை