மாவட்ட செய்திகள்

பசுமை தொழிற்சாலைகள் தொடர்பாக நாராயணசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை

பசுமை தொழிற்சாலைகள் தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவையில் முதல்அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பதவியேற்றதை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டது. இந்த தொழிற்கொள்கையின் அடிப்படையில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க பல தொழிலதிபர்கள் விண்ணப்பித்தனர்.

இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை தொழிற்சாலைகளை கொண்டு வருவது, தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அனுமதிகளை எளிமையாக்குவது உள்ளிட்டவைகள் தொடர்பாக முதல்அமைச்சர் நாராயணசாமி நேற்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர். வருகிற 29ந்தேதி தொழிலதிபர்களுடன் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது தொடர்பாக எந்த மாதிரியான விஷயங்களை விவாதிப்பது, பசுமை தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு அளிக்கப்பட வேண்டிய சலுகைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...