மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அருகே பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

பவானிசாகர் அருகே பலத்த சூறாவளிக்காற்றுடன் மழைபெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

தினத்தந்தி

புஞ்சைபுளியம்பட்டி,

பவானிசாகர் அருகே உள்ள சிந்தன்குட்டை, அய்யம்பாளையம் பகுதியில் விவசாயிகள் ரஸ்தாளி, பூவன், மொந்தன், ரொபஸ்டா உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகளை சாகுபடி செய்துள்ளார்கள். தற்போது வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது. பவானிசாகரில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காற்று வீசியது. சிறிது நேரத்தில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழைபெய்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சிந்தன்குட்டை, அய்யம்பாளையம் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பவானிசாகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் கடும் வறட்சி நிலவுகிறது. மழை பெய்யவில்லை. எனினும் கஷ்டப்பட்டு வாழைகள் பயிரிட்டோம். அதன் பயனாக வாழைகள் நன்கு வளர்ந்தது. தற்போது குலை தள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்தது. சில நாட்களில் அறுவடை செய்ய நினைத்திருந்தோம். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்

ஆனால் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்துவிட்டன. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் சாய்ந்த வாழைகளை பார்வையிட்டு எங்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு