மாவட்ட செய்திகள்

புவனகிரி அருகே, தொழிலாளிக்கு கத்திக்குத்து; மனைவி உள்பட 3 பேர் கைது

புவனகிரி அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள சின்னூர் பகுதியை சேர்ந்தவர் கமல்மதி (வயது 39). தொழிலாளி. இவரது மனைவி மயில்வேல் அழகி(36). சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மயில்வேல் அழகி, கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கமல்மதி தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் மயில்வேல் அழகியை, கமல்மதியுடன் அனுப்பி வைக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மயில்வேல் அழகி, அவரது உறவினர்கள் உதயகுமார், சாந்தி ஆகிய 3 பேரும் கமல்மதியை தாக்கி, கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த கமல்மதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மயில்வேல் அழகி, உதயகுமார், சாந்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்